தமிழில் "திட்டு" திட்டல்ல..
இதுவே தமிழின் தனிப்பெரும் சிறப்பாகும். -- "சிவநெறிசெஞ்சொற்கொண்டல்" 'சித்தாந்த செஞ்ஞாயிறு' தவத்திரு.அழகரடிகள் சொற்பொழிவிலிருந்து..!!
ஒருவனை முட்டாள் என வையும்போது அதன் உண்மைப் பொருள் யாதென அறிவோம்.
முட்டு+ஆள் = செயலில் வரும் இடுக்கண்களை எதிர் கொள்வாய் என ஊக்க உரையாக கூறப்பட்டதே ஆகும்
தமிழில் எந்த ஒரு சொல்லும் ஒருவனை நகைபட எள்ளுவதாக க் கூறினாலும் அச்சொல் அவனுக்கு ஊக்கமளிப்பதாகவே அமையும்.
மடையன் = மடு+ஐயன்
மடு என்றால் நிறைதல் என்பது பொருள். ஐயன் என்றால் உயர்ந்தவன். நற்குணங்கள் நிறைந்த பெரியவனாய் வரவேண்டிய நீ இப்படி முயற்சி அற்று இருக்கலாகாது என்பதே ஆழ்ந்த சொற்பொருள்.
மட்டி= மடு+இ எனவாகும் இதுவும் மேற்குறித்ததே ஆகும்.
இவ்வளவு ஏன் "திட்டு" என்பதே ஒரு உயர்ந்த நிலப் பரப்பு என்று
பொருள்படும்.
திட்டுவது என்றால் உள் நோக்கம் நீ நீரில் பாதுகாப்பு அற்று மூழ்கி விடாமல் உயர்ந்த நிலப் பரப்பில் பாதுகாப்போடு இருக்க வேண்டும் என்பதாகும். அதற்கான முயற்சியை மேற்கொள் என்பதாகும். வாழ்க்கையில் இடர்களில் மூழ்கி அமிழாமல் உன்னை பாதுகாத்துக் கொள் என்பதற்கான அறிவுரையே ஆகும்.
இப்படிப் பார்த்தால் நம் மொழியில் கடிந்துரையும் மறைவான ஊக்க உரையேயாகும் என்பதறிந்து மகிழலாம். இழிப்புரையாக க் கருத வேண்டுவதில்லை.
செப்பமுற்ற மொழி எத்தனை பண்பாட்டு நலன்கள் கொண்டுள்ளது என எண்ணி இன்புறலாம்.
மேற்கூறியவை தவத்திரு. அழகரடிகள்(இளவழகனார்) சொற்பொழிவில் இருந்து தொகுக்கப்பட்டது. இவர் மறைமலை அடிகளின் தலைமாணவர், மாம்பாக்கம்
திருக்குறள் பீடத்தை நிறுவியவர்
இதுவே தமிழின் தனிப்பெரும் சிறப்பாகும். -- "சிவநெறிசெஞ்சொற்கொண்டல்" 'சித்தாந்த செஞ்ஞாயிறு' தவத்திரு.அழகரடிகள் சொற்பொழிவிலிருந்து..!!
ஒருவனை முட்டாள் என வையும்போது அதன் உண்மைப் பொருள் யாதென அறிவோம்.
முட்டு+ஆள் = செயலில் வரும் இடுக்கண்களை எதிர் கொள்வாய் என ஊக்க உரையாக கூறப்பட்டதே ஆகும்
தமிழில் எந்த ஒரு சொல்லும் ஒருவனை நகைபட எள்ளுவதாக க் கூறினாலும் அச்சொல் அவனுக்கு ஊக்கமளிப்பதாகவே அமையும்.
மடையன் = மடு+ஐயன்
மடு என்றால் நிறைதல் என்பது பொருள். ஐயன் என்றால் உயர்ந்தவன். நற்குணங்கள் நிறைந்த பெரியவனாய் வரவேண்டிய நீ இப்படி முயற்சி அற்று இருக்கலாகாது என்பதே ஆழ்ந்த சொற்பொருள்.
மட்டி= மடு+இ எனவாகும் இதுவும் மேற்குறித்ததே ஆகும்.
இவ்வளவு ஏன் "திட்டு" என்பதே ஒரு உயர்ந்த நிலப் பரப்பு என்று
பொருள்படும்.
திட்டுவது என்றால் உள் நோக்கம் நீ நீரில் பாதுகாப்பு அற்று மூழ்கி விடாமல் உயர்ந்த நிலப் பரப்பில் பாதுகாப்போடு இருக்க வேண்டும் என்பதாகும். அதற்கான முயற்சியை மேற்கொள் என்பதாகும். வாழ்க்கையில் இடர்களில் மூழ்கி அமிழாமல் உன்னை பாதுகாத்துக் கொள் என்பதற்கான அறிவுரையே ஆகும்.
இப்படிப் பார்த்தால் நம் மொழியில் கடிந்துரையும் மறைவான ஊக்க உரையேயாகும் என்பதறிந்து மகிழலாம். இழிப்புரையாக க் கருத வேண்டுவதில்லை.
செப்பமுற்ற மொழி எத்தனை பண்பாட்டு நலன்கள் கொண்டுள்ளது என எண்ணி இன்புறலாம்.
மேற்கூறியவை தவத்திரு. அழகரடிகள்(இளவழகனார்) சொற்பொழிவில் இருந்து தொகுக்கப்பட்டது. இவர் மறைமலை அடிகளின் தலைமாணவர், மாம்பாக்கம்
திருக்குறள் பீடத்தை நிறுவியவர்